எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்(ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
பொருளடக்கம்:
1. இளமைப்பருவம்
2. திரைப்பட வாழ்க்கை
3. அரசியல் வாழ்க்கை
4. எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
5. சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
6. இவற்றையும் பார்க்கவும்
7. ஆதாரங்கள்
8. வெளி இணைப்புகள்
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் | |
---|---|
![]() மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் | |
பிறப்பு | ஜனவரி 17, 1917 நாவலப்பிட்டி, |
இறப்பு | டிசம்பர் 24, 1987 தமிழ்நாடு, |
தொழில் | நடிகர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி |
பிள்ளைகள் | கிடையாது |
1. இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.[3]
2. திரைப்பட வாழ்க்கை
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.
3. அரசியல் வாழ்க்கை

ம.கோ.இரா-வின் அம்பாசடர் கார்
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும்,[சான்று தேவை] தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[4] இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[சான்று தேவை] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
4. எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
- ராஜ ராஜன்
- ராஜகுமாரி
- மன்னாதி மன்னன்
- மந்திரி குமாரி
- திருடாதே
- மலைக்கள்ளன்
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
- மதுரை வீரன்
- புதுமைப்பித்தன்
- ஆயிரத்தில் ஒருவன்
- அன்பே வா
- எங்க வீட்டுப் பிள்ளை
- நாடோடி மன்னன்
- படகோட்டி
- ரிக்ஷாக்காரன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- ராமன் தேடிய சீதை
- அடிமைப்பெண்
5. சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
5. 1. விருதுகள்
- பாரத் விருது - இந்திய அரசு
- அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
- பாரத ரத்னா விருது - இந்திய அரசு
- பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
- சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்(ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
- வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
5. 2. திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
- புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
- நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
- மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
- பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
- மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
- கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
- கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
- கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
- கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
- கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
- திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
5. 3. பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
- கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
- கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
- நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
- பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
- மக்கள் திலகம் - தமிழ்வாணன்
- வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
- புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்
- இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
- மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்
- ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்
6. இவற்றையும் பார்க்கவும்
7. ஆதாரங்கள்
- எம்.ஜி.ஆர். வாழ்கை
- எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்", பி. பி. சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது. (தமிழ்)
- வாழ்க்கைக் குறிப்பு
- எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்", பி.பி.சி.. 2006-11-08 அன்று தகவல் பெறப்பட்டது. “திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்.
No comments:
Post a Comment