தேவகன்யா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மனாபனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பல மாயாஜாலக் காட்சிகளைக் கொண்டது. சொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வீ. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது.
தேவகன்யா | |
![]() | |
இயக்குனர் | ஆர். பத்மனாபன் |
---|---|
கதை | ஆர்.பத்மனாபன் |
நடிப்பு | சொன்னப்ப பாகவதர் யூ. ஆர். ஜீவரத்தினம் வீ. என். ஜானகி டி. ஆர். ராமச்சந்திரன் எம். ஆர். சாமிநாதன் எம். எஸ். முருகேசன் டி. வி. சேதுராமன் ஈ. ஆர். சகாதேவன் ஜோக்கர் ராமுடு வி. பி. எஸ். மணி எம். ஏ. கணபதிபட் டி. எஸ். ஜெயா கே. எஸ். அங்கமுத்து கே. பி. ஜெயராமன் எஸ். ஏ. பத்மனாபன் P. B. ஸ்ரீநிவாசன் சக்ரபாணி அய்யங்கார் |
இசையமைப்பு | எஸ். ஜி. செல்லப்பா அய்யர் |
வினியோகம் | த சௌத் இந்தியா பிக்சர்ஸ், காரைக்குடி |
வெளியீடு நாட்கள் | 1943 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
2. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்
எஸ். ஜி. செல்லப்பா ஐயர் இயற்றிய பாடல்களுக்கு பலவான்குடி வி. சாமா ஐயர் இசையமைத்திருக்கிறார்.மொத்தம் 16 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
- சங்கீதமே சர்வஜீவநாத சுவரராக பாவ லயமே (ராகம்: வாசஸ்பதி, ஆதி தாளம், பாடியவர்: சி. சொன்னப்ப பாகவதர்)
- எல்லோரும் உணவு கொள்வீரே (சுத்த சாவேரி, ஆதி, வி. என். ஜானகி)
- வசந்த காலமிது நலமே (கமாஸ், ரூபகம், வி. என். ஜானகி)
- இன்று உனது எழில்காணக் க்கிடைத்தது (காம்போதி, ஆதி, வி. என். ஜானகி)
- ஆகா இதே ஆன்ந்தம் (ஹிந்தோளம், ஆதி, யூ. ஆர். ஜீவரத்தினம்)
- உலகினையார் வகுத்தாரே முதலி (செஞ்சுருட்டி, ஆதி, சொன்னப்ப பாகவதர்)
- என் மனம் கொள்ளை கொண்டாய் நீயே (ஆபோகி, ஆதி, சொன்னப்ப பாகவதர்)
- எனதருமை சிங்காரா வா வா (யமுனாகல்யாணி, திச்ர லகு, ஜீவரத்தினம்)
- மாசிலா மணியே மதனரதி யே (குந்தவராளி, ஆதி, சொன்னப்ப பாகவதர்)
- [[புவன மாதி அண்ட சராசரம் நடுங்க (மோகனம், ஆதி, டி. ஆர். ராமச்சந்திரன்)
No comments:
Post a Comment